ஓடும் ஆற்றில் மீன் பிடிக்கும் கரடிகள் - வைரல் ஆகும் வீடியோ

மணிக்கணக்கில் தூண்டில் வைத்து மீன்பிடிப்பதே மிகப்பெரிய கஷ்டமாக இருக்கும் நிலையில் கரடிகள் லாவகமாக மீன்பிடிப்பது இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது.
மனிதர்களைப் போலவே விலங்குகள் ஸ்மார்டாக சிந்திக்கக்கூடியவை என விலங்குகளை நேசிப்பவர்கள் கூறுவதுண்டு. வீடுகளில் இருக்கும் நாய் மற்றும் பூனை முதல் வனப்பகுதிகளில் வசிக்கும் விலங்குகள் வரை என அவற்றிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.
மணிக்கணக்கில் தூண்டில் வைத்து மீன்பிடிப்பதே மிகப்பெரிய கஷ்டமாக இருக்கும் நிலையில் கரடிகள் லாவகமாக மீன்பிடிப்பது இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது.
மனிதர்களைப் போலவே விலங்குகள் ஸ்மார்டாக சிந்திக்கக்கூடியவை என விலங்குகளை நேசிப்பவர்கள் கூறுவதுண்டு. வீடுகளில் இருக்கும் நாய் மற்றும் பூனை முதல் வனப்பகுதிகளில் வசிக்கும் விலங்குகள் வரை என அவற்றிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.
அந்த வீடியோவில் ஓடும் நீர் கீழே விழும் தடுப்புச் சுவர் பகுதியில் வரிசையாக நிற்கின்றன. நீர் கீழே விழும்போது துள்ளிக் குதிக்கும் மீன்கள் தான் அவற்றின் இலக்கு. இதற்காக அந்த இடத்தில் சரியாக நிற்கும் கரடிகள், துள்ளிக் குதிக்கும் மீன்களை லாவகமாக பிடித்து இரையாக்கிக் கொள்கின்றன. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திருப்பதுடன், வைரல் லிஸ்டிலும் இடம்பிடித்துள்ளது.
— African animal (@africaniml) March 24, 2022



