கொழும்பில் எரிவாயு பெறுவதற்காக காத்திருந்தவரின் பரிதாப நிலை

#SriLanka #Colombo #Litro Gas
Nila
4 years ago
கொழும்பில் எரிவாயு பெறுவதற்காக காத்திருந்தவரின் பரிதாப நிலை

தெஹிவளையில் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது விழுந்து மயங்கி விழுந்துள்ளார்.
 
சம்பவ இடத்தில் இருந்த தெஹிவளை பொலிஸார் குறித்த முதியவரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
 
இன்று காலை முதல் தெஹிவளை காலி வீதி, வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயு எடுக்க வந்த மக்களின் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4