எரிவாயுவை இறக்குமதி செய்ய மத்திய வங்கி டொலர்களை வழங்க தயாராக இருக்கிறது.
#SriLanka
#Central Bank
#Laugfs gas
Mugunthan Mugunthan
3 years ago

எரிவாயு நெருக்கடிக்கு எதிர்காலத்தில் தீர்வு காணப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இன்று தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க ஊடகவியலாளர்களுடன் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இருப்பினும், எரிவாயு வாங்க இன்னும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் நேற்று இரவு சிலர் எரிவாயு வரிசைக்கு வந்திருந்தனர். இன்று காலை 8 மணியளவில் அளுத்கம தர்கா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் 600 இற்கும் அதிகமான மக்கள் கூடியிருந்த நிலையில் இன்று 300 பேருக்கு மாத்திரமே எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.



