எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட மோதல் : கத்தியால் குத்தி 29 வயது நபர் கொலை..

Prathees
4 years ago
எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட மோதல் : கத்தியால் குத்தி 29 வயது நபர் கொலை..

எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவ பகுதியில் உள்ள எரிபொருள் வரிசையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூரிய ஆயுதம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 29 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர் முச்சக்கர வண்டி சாரதி ஆவார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4