உக்ரைன் ஜனாதிபதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Nila
4 years ago
உக்ரைன் ஜனாதிபதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

2022ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை பரிந்துரைக்குமாறு ஐரோப்பிய அரசியல்வாதிகள் நோபல் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரை செயல்முறையை மீண்டும் விடுக்குமாறு நோபல்  குழுவிடம் கேட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைகள் மார்ச் 31ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 11 அன்று, ஐரோப்பிய அரசியல்வாதிகள் நோபல் குழுவிற்கு கடிதம் எழுதி, அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரையை மார்ச் 31 வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்களைத் தெரிவுசெய்யும் பொறுப்பு நோபல் குழுவின் பொறுப்பாகும். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா வரும் டிசம்பர் 10ம் திகதி ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4