யாலா பருவத்திற்கு தேவையான கரிம உரங்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

#SriLanka
யாலா பருவத்திற்கு தேவையான கரிம உரங்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு யலா பருவத்திற்கு தேவையான சேதன உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யாலா அறுவடை வரை நாட்டில் நெல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யாலா பருவத்தில் நெற்செய்கை வெற்றிகரமாக அமையும் என பலமான நம்பிக்கை நிலவுவதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்தார்.
நெல் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக  நேற்று தெரிவித்தோம். மேலும் இன்று ஒரு கிலோ நாட்டு நெல்லின் விலை 110 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4