கத்தரிக்காய் வகையை சேர்ந்த சுண்டைக்காய் வத்தல் குழம்பு கசக்காதவாறு சமைப்பது எப்படி?

#Cooking #Vegetable #curry
கத்தரிக்காய் வகையை சேர்ந்த சுண்டைக்காய் வத்தல் குழம்பு கசக்காதவாறு சமைப்பது எப்படி?

தேவையானவை :

  • சுண்டைக்காய் -1/4 கப் 
  • பூண்டு உரித்தது - 1/4 கப் 
  • சின்ன வெங்காயம் - 1/4 கப் 
  • சின்ன தக்காளி, நறுக்கவும் -1 
  • கருவேப்பிலை - தேவையான அளவு
  • புளி பொடிகள் - பெரிய நெல்லி அளவு 
  • சாம்பார் பொடி - 3 Tsp குவித்து 
  • கொத்த மல்லி பொடி - 1 Tsp 
  • அரைத்து விட்ட குழம்புத் தூள் - 1/2 Tsp 
  • மஞ்சத் தூள் - 2 சிட்டிகை 
  • உப்பு - 2 Tsp 

தாளிக்க : 

  •  நல்லெண்ணெய் - 3 Tsp 
  • கடுகு - 1/2 Tsp 
  • வெந்தயம் - 1/4 Tsp  
  • பெருங்காயம் - சிறு துண்டு 
  • கடலைப் பருப்பு - 2 Tsp 
  • நிலக்கடலை - 3 Tsp 
  • வெல்லம் - சிறு துண்டு 

செய்முறை :

  1. புளியை சிறிது சூடான தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தையும் பூண்டையும் உறித்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  2. சுண்டைக் காய்களின் காம்பை நீக்கி கழுவிய பின்னர் இரு துண்டுக ளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  3. அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து 2 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும் கடுகை வெடிக்க விடவும். அதன் பின் கடலை பருப்பு, நிலக்கடலை போட்டு வறுக்கவும். 
  4. பொன்னிற மானதும் வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுத்த பின் கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு போட்டு மணம் வரும் வரை வதக்கவும். 
  5. பிறகு தக்காளியை 1 நிமிடம் வதக்கவும். அடுத்து மஞ்சத் தூள் மற்றும் வெட்டி வைத்துள்ள சுண்டைக்காய் சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
  6. பின்னர் கொடுக்கப் பட்டுள்ள தூள்களை சேர்த்து சில வினாடிகள் பிரட்டி விட்டு முக்கால் கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
  7. கடைசியாக புளியை கரைத்து வடுகட்டி சேர்க்கவும். எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் வரை கொதிக்க விடவும். கடைசியாக உப்பு சரி பார்க்கவும்.
  8. நான்கைந்து கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைக்கவும். பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  9. சாதத்தில் சுண்டைக்காய் வத்தக் குழம்பை விட்டு நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி பிசைந்து விருப்பமான பொரியல் அல்லது கறியுடன் சுவைக்கவும். 
  10. பருப்பு சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிக மிக அருமை யாக இருக்கும். தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.