இலங்கையில் உயிருடன் இருப்பவருக்கு மரண சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்
Nila
3 years ago

எம்பிலிபிட்டிய – செவனகல பகுதியில் உயிருடன் உள்ள நபர் ஒருவருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்ட செய்தியொன்று பதிவாகியுள்ளது.
2018ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக கூறியே, இந்த மரண சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வாகன விபத்தினால் மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஏற்பட்ட கசிவே மரணத்திற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.
48 வயதான டபிள்ஸ்.ஈ.சரத் என்ற நபருக்கே இவ்வாறு மரண சான்றிதழ் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



