எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை!
Prabha Praneetha
3 years ago

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 750 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் இன்று(வியாழக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது.



