முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி செயலகம்! நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களால் பதற்றம்...
#SriLanka
#Sri Lanka President
Mugunthan Mugunthan
3 years ago
ஐக்கிய மக்கள் சக்தியால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தை அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியே வருமாறு அழைப்பதுடன், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கான பலத்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.