பாடசாலைக்கு செல்வதாக கூறி அணைக்கட்டு அருகே மது அருந்திய 16 வயது மாணவன் நீரில் மூழ்கி பலி

Prathees
4 years ago
பாடசாலைக்கு செல்வதாக கூறி அணைக்கட்டு அருகே மது அருந்திய 16 வயது மாணவன் நீரில் மூழ்கி பலி

நண்பர்கள் குழுவுடன் பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி, கம்பஹா, தரலுவ கெடவல அணைக்கட்டுக்கு அருகில் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கம்பஹா வீரகுள பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நண்பர்கள் குழுவுடன் அணைக்கட்டு அருகே மது அருந்தி உல்லாசமாக இருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த இளைஞனின் சடலம், அவர் தண்ணீரில் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் ஆழத்தில்  உள்ளூர்வாசிகள் கண்டுபிடித்தனர்.

எனினும்இ இந்த அணைக்கட்டுக்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவது மிகவும் ஆபத்தானது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4