நான்கு எரிபொருள் தாங்கிகள் இரத்து: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

#Fuel
Mayoorikka
3 years ago
நான்கு எரிபொருள் தாங்கிகள் இரத்து:  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இந்த வார இறுதிக்குள் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அதிகாரிகள் கூறினாலும், இந்த வார இறுதி வரை தொடரும் என பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முத்துராஜவெல முனையத்தில் சுமார் 20,000 தொன் டீசல் சரக்கு இறக்கப்பட்ட போதி லும், அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கே அது போதுமானதாக இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இம்மாதம் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் வரவிருந்த நான்கு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களும் இரத்துச் செய்யப்பட் டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது சுமார் 7000 தொன் டீசல் உற்பத்தித் திறன் கொண்டுள்ளதாகவும், மசகு எண்ணெய்க் குறைவினால் இன்னும் சில நாட்களில் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!