அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
Nila
3 years ago

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் ஜனாதிபதியினால் மீளப் பெற்றுக்கொண்டதை அடுத்து, வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சு பொறுப்புக்களை முறையாக செய்ய போவதில்லை அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனங்கள் மற்றும் இல்லம் ஆகியவற்றை கையளித்துள்ளார்.



