இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

#Douglas Devananda #Fisherman #government
Reha
4 years ago
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, கருத்துரைத்த யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம், அன்னராசா, இது இருநாட்டு மீனவ பிரச்சினையே தவிர, இலங்கை இந்திய மோதல் இல்லை என தெரிவித்தார்.

எனவே, தற்போது பொருளாதார ரீதியில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இலங்கை மீனவர்களுக்காக, இந்திய மீனவர்கள் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4