இலங்கையில் தொடர் மின்சார தடையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

Nila
4 years ago
இலங்கையில்  தொடர் மின்சார  தடையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

இலங்கையில் மின்சாரத் தடை காரணமாக தொலைத் தொடர்புக் கோபுரங்கள் மூலமான தொலைக் காட்சி -வானொலி ஒலிபரப்பும் தடைப் பட்டுள்ளது.

 மின்சாரம் இல்லாத போது, ​​டீசல் அவர்களது வேலைக்காக மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆனால், இதற்கான டீசல் வழங்குவது நெருக்கடியாக உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சில அலைவரிசைகள் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டுள்ளன.
 
இது தொடர்பாக பல வானொலி அலைவரிசைகள், ஊடகங்கள் தகவல் அமைச்சரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
 
ஏழரை மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டால், மின் பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு மாதம் 100,000 லீற்றருக்கும் அதிகமான டீசல் தேவைப்படும் என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) பேச்சாளர் தெரிவித்தார்.
 
மின் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரங்களுக்கு அதே வேகத்தில் இணைய வசதிகளை வழங்குவது சவாலாக உள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4