போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனிடம் ரஷியா முன் வைத்த 4 நிபந்தனைகள்?

#Russia #Ukraine
Prasu
4 years ago
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனிடம் ரஷியா முன் வைத்த 4 நிபந்தனைகள்?

சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது.

ரஷியா உக்ரைனை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து தாக்கி, கீவ், கார்கிவ் மற்றும் மரியுபோல் துறைமுகம் உள்ளிட்ட நகரங்களைத் தாக்கியது. பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட இந்த படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிக மோசமான அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியது மற்றும் மாஸ்கோ மீது கடுமையான தடைகளுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், உக்ரைன் தனது நிபந்தனைகளுக்கு சம்மதித்தால், "ஒரு நொடியில்" இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தத் தயாராக இருப்பதாக ரஷியா கூறியுள்ளது.

ரஷியா முன் வைத்துள்ள நிபந்தனைகளின் பட்டியல்:

  •  உக்ரைன் தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.
  •  உக்ரைன் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க அதன் அரசியலமைப்பை மாற்ற வேண்டும்.
  •  கிரிமியாவை ரஷியாவின் பிரதேசமாக அங்கீகரிக்க வேண்டும்.
  •  டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்கை சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும்.

இந்த நான்கு நிபந்தனைக்கு உக்ரைன் சம்மதித்தால் உடனடியாக போரை நிறுத்துவதாக ரஷியா கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4