எரிவாயு இல்லை.. பேக்கரிகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன
Prathees
3 years ago

சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், பேக்கரிகள் உட்பட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காஸ் தட்டுப்பாடு காரணமாக பல நாட்களாக உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
எரிவாயு நிறுவனம் எரிவாயு முகவர்களுக்கு எரிவாயு இருப்புக்களை விநியோகிக்காததால் சில எரிவாயு விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.



