தனம்,தானியம்,தன்னிறைவு தரும் தன்வந்திரியின் மந்திரம் நீங்களும் ட்றை பண்ணிப் பாருங்க

Prasu
2 years ago
தனம்,தானியம்,தன்னிறைவு தரும் தன்வந்திரியின் மந்திரம் நீங்களும் ட்றை பண்ணிப் பாருங்க

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு, சக்கரம், அட்டைபூச்சி, அமிர்தகலசம் இவற்றுடன்  தோன்றியவர் தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான். ஆயுர்வேதம் அவரால் தோன்றியது.

கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தாலும் வியாதிகள் நீங்கும்.வெண்ணெயில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.

 ஓம் நமோ பகவதே வாசுதேவாய|
தன்வந்திரியே |
அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|
த்ரைலோக்ய நாதாய |
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||