இலங்கையின் முதலாவது விமானப்படைத் தளபதி காலமானார்
Prathees
3 years ago
இலங்கை விமானப்படையின் முதலாவது தளபதி எயார் சீஃப் மார்ஷல் பத்மன் ஹரிபிரசாத் மெண்டிஸ் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 88.
1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி பிறந்த இவர் 1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி ராயல் சிலோன் விமானப்படையின் ஐந்தாவது பயிற்சியாளராக சேர்ந்தார்.
இறுதிக் கிரியைகள் பூரண மரியாதையுடன் நாளை (19) கல்கிசை நிசல செவன பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.