இன்றைய வேத வசனம் 11.01.2022

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 11.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

ஒரு பெரிய கழுகு ஒன்றைக் கடைக்காரன் ஒருவன் ஒரு பெரிய கூண்டில் அடைத்து, அதன் கால்களை இரும்புச் சங்கிலியால் கட்டி, காட்சிப் பொருளாய் வைத்திருந்தான். ஏராளமான சிறுவர்களும், பெரியவர்களும் வேடிக்கை பார்க்க அங்கே கூடுவதுண்டு.

வாலிபன் ஒருவன் அந்தக் கழுகின் மேல் இரக்கம் கொண்டு, அந்த கடைக்காரனிடம், அந்தக் கழுகை எனக்குத் தந்துவிட முடியுமா? என்று கேட்டான். கடைக்காரன் ஒரு பெருந்தொகையை வாங்கிக் கொண்டு, கழுகை விற்று விட்டான்.

ஒரு மலையின் அடிவாரத்திற்குக் கொண்டு சென்று, கூண்டிலிருந்து கழுகை எடுத்து, காலில் இருந்த சங்கிலியை அவிழ்த்து வெளியே விட்டான் அந்த வாலிபன்.

ஆனால் அந்தக் கழுகு பறக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. தான் விடுதலை பெற்று விட்டதையும், தன்னால் இனி உன்னதங்களிலே பறக்க முடியும் என்பதையும் கழுகு உணரவே இல்லை!
சற்று நேரத்திற்குப்பின், ஆகாயத்தில் ஏதோ ஒரு கழுகு பறப்பதைக் கண்டு, இந்தக் கழுகும் தன்னை அறியாமல் செட்டைகளை அடித்து பறக்க ஆரம்பித்துவிட்டது!

இப்படிதான் சாத்தானும் அநேகரை பாவ அடிமைத்தனத்திற்குள் கட்டி வைத்திருக்கிறான். இயேசு கல்வாரியின் கிரயம் செலுத்தி மீட்டுங்கூட, அவர்களுக்குள் பழைய பாவ சுபாவம் இருக்கிறபடியால், செட்டைகளை அடித்து உயர எழும்பாமலிருக்கிறார்கள்.

ரோமர் 8:2
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!