இன்றைய வேத வசனம் 08.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் கொத்தி கொண்டிருந்த அதே நேரத்தில், ஒரு மின்னல் அந்த மரத்தைத் தாக்க, அந்த மரம் கீழே சாய்ந்தது.
மரங்கொத்திப் பறவைக்குப் பெருமை தாங்கவில்லை. "நான் கொத்தியதால்தான், இந்த மரம் விழுந்தது என் அலகு எவ்வளவு பெலன் வாய்ந்தது" என்று பெருமை கொண்டது.
அதுமட்டுமல்ல, இன்னும் பெரிய மரங்களையும் நான் வீழ்த்திக் காட்டுகிறேன் பாருங்கள், என்று சவால் விட்டு போய், தன் அலகை முறித்துக் கொண்டது.
இன்று நம்மில் அநேகர் இப்படித்தான் பரிசுத்தாவியானவர் அவர்கள் வாழ்க்கையிலும், ஊழியங்களிலும் கிரியை செய்திருக்க, கர்த்தருக்கு மகிமை செலுத்தி தங்களை மறைத்து ஜீவிக்காமல், என் ஊழியத்தில் இத்தனை பேர் ஒப்புக்கொடுத்தார்கள், இரட்சிக்கப்பட்டார்கள் என்று "டமாரம்" அடித்து கடைசியில் விழுந்து போய்விடுகிறார்கள்.
உங்கள் மூலம் இதுவரை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் சுமார் எத்தனை பேர் இருப்பார்கள்? என்று தேவ மனிதர் மூடியிடம் கேட்டபோது,
அவர் தாழ்மையாக சொன்னார்:- "நான் கணக்குப் பார்க்க ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகம் என்னிடத்தில் இல்லை. நான் அப்பிரயோஜன மற்ற ஊழியக்காரன்" என்றாராம்!!
கர்த்தர் D.L மூடி பிரசங்கியாரை கடைசிவரையும் வல்லமையாக உபயோகப்படுத்தினதின் இரகசியம் இதுதான். தேவஜனமே, உங்களைத் தாழ்த்தி, கிறிஸ்துவில் மறைந்து ஊழியஞ்செய்யுங்கள். அப்பொழுது பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். ஆமென்.
சங்கீதம் 106:2
கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?



