4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்..(வீடியோ பதிவு உள்ளே)

4 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரேதேச மாநிலம், போபாலில் 4 வயது சிறுமி ஒருவர் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தெருநாய்கள் சிறுமியை விரட்ட தொடங்கியது. இதில் , பயந்து போன அந்த சிறுமி தப்பிக்க முயற்சி செய்தார்.
Horrific! Stray dogs mauled a 4 year old girl in Bhopal a passerby threw stones at the dogs and chased them away. The child has been hospitalized with severe injuries. pic.twitter.com/X4EyruZxra
— Anurag Dwary (@Anurag_Dwary) January 2, 2022
அப்போது, அவர் கீழே விழுந்த சிறுமியை தலை, கை, கால், என அனைத்து இடங்களிலும் கடித்து குதறியுள்ளன.
அந்த சிறுமியின் கதறல் சத்தம் கேட்கவே அங்கிருந்த ஒருவர் அந்த தெருநாய்களை விரட்டி விட்டு சிறுமியை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர். போபாலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பதாகவும் அவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தியச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



