காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவினர் கிளிநொச்சி விஜயம்!

#Kilinochchi
Mayoorikka
1 year ago
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவினர்  கிளிநொச்சி விஜயம்!

காணாமல் போனோர் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினர்  இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் காணாமல் போனோரின் குடும்பங்களை சந்தித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த குழுவின் தலைவர் நீதியரசர் ஏ எச் எம்டி நவாஸ் தலைமையில் முன்னால் பொலிஸ்மா அதிபர் சந்ரா பெர்னான்டோ, முன்னாள் அரச அதிபர் நிமல் அபேசிங்க, லோகேஸ்வரி பத்மராஜா ஆகியுாரை உள்ளடக்கிய ஆணைக்குழு உறுப்பினர்கள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு