சந்திரனுக்குரிய 108 மந்திரம் சொல்லுவதால் என்ன பலன்?

#spiritual
சந்திரனுக்குரிய 108 மந்திரம் சொல்லுவதால் என்ன பலன்?

சந்திரனுக்குரிய நாள் அவரின் மந்திரம் மற்றும் 108 போற்றி சொல்லி வந்தால் மன அமைதி கூடும் முழு மதியை போன்று முகத்தில் வசிய சக்தி உண்டாகி கவர்ச்சி கூடும் தெளிவான சிந்தனை பிறக்கும்.

திங்கள் கிழமைகள் தோறும் ( நான்காம்பிறை நாள் தவிர ),மற்றும் பௌர்ணமி தோறும் இரவில் 8 முதல் 9 மணிக்குள் ஸ்ரீ சந்திர பகவானை வணங்கி தீபம்,தூபம் காட்டி வணங்கி கீழ்க்கண்ட மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து குறைந்தது 27 தடவை அதிகமாக 108 தடவை வரை ஜெபித்து வர அழகு கூடுவதுடன் ,மன அமைதி கிட்டும் ,அதிகம் கோபம் கொள்பவர்கள் சாந்த குணம் பெறுவர் . பார்வதி தேவியின் அருளும்,மஹாலக்ஷ்மியின் அருளும் உண்டாகும்.முகத்தில் தேவையற்ற பரு,தழும்பு இவைகள் அற்ற மிருதுவான தோல் அமைவதுடன்,முக வசீகரம் உண்டாகும்.

வளர்பிறை திங்கள்கிழமை அன்று ஆரம்பிக்கவும்.

மந்திரம்:

ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ
காரியத்தடை போக்கும் சந்திரன் வழிபாட்டு பாடல்
சிவனின் சடைமேல் சிறப்புடன் விளங்கும்
மதியே உன்னை மகிழ்வுடன் துதித்தேன்!
நிறத்தில் வெண்மையும், நெல்லாம் தான்யமும்
சிறப்புடன் வழங்கச் செல்வம் கொடுப்பாய்!
முத்தாம் ரத்தினம் முழுமலர்
அல்லி வைத்தோம் உனக்கு வரம்தருவாயே!
புத்தி பலம்பெற பொன்பொருள்
குவிய சக்தி வழங்கும் சந்திரா வருக!

இந்த சந்திரன் வழிபாட்டு பாடலைச் சொல்லி சந்திரனை வழிபடுவதால், நாம் செய்யப் போகும் காரியங்களில் ஏதேனும் காரியத்தடை அல்லது இடையூறுகள் இருப்பினும் அவைகள் நீங்கப் பெற்று செய்யும் செயல்கள் அனைத்தும் ஜெயமாகும். ‘மனது காரகன்’ மற்றும் ‘மாதா காரகன்’ என்று அழைக்கைப்படுபவர் சந்திரன் ஆவார். எனவே, இந்தப் பாடலைச் பாடி சந்திரனை வணங்குவதால் சிந்தித்த காரியங்கள் குறையேதும் இன்றி வெற்றிகரமாய் அமையும். மனமகிழ்ச்சியும் நிறைவும் வாழ்வில் என்றும் நிலைக்கும்.

மூல மந்திரம்

"ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக சந்திராய நமஹ",
48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.

ஸ்தோத்திரம்

ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்!
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!
சந்திர காயத்ரி மந்திரம்
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி|
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||
ஓம் அம்புலியே போற்றி
ஓம் அமுத கலையனே போற்றி
ஓம் அல்லி ஏந்தியவனே போற்றி
ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி
ஓம் அபய கரத்தனே போற்றி
ஓம் அமைதி உருவனே போற்றி
ஓம் அன்பனே போற்றி
ஓம் அஸ்த நாதனே போற்றி
ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி
ஓம் அயர்ச்சி ஒழிப்பவனே போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆத்திரேய குலனே போற்றி
ஓம் இனிப்புப் பிரியனே போற்றி
ஓம் இரண்டாம் கிரகனே போற்றி
ஓம் இனியவனே போற்றி
ஓம் இணையிலானே போற்றி
ஓம் இரவிருள் அகற்றுபவனே போற்றி
ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி
ஓம் இரு கரனே போற்றி
ஓம் இரவு நாயகனே போற்றி
ஓம் ஈய உலோகனே போற்றி
ஓம் ஈரெண் கலையனே போற்றி
ஓம் ஈர்ப்பவனே போற்றி
ஓம் ஈசன் அணியே போற்றி
ஓம் உவகிப்பவனே போற்றி
ஓம் உலகாள்பவனே போற்றி
ஓம் எழில்முகனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஒணத்ததிபதியே போற்றி
ஓம் ஒளடதீசனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கலா நிதியே போற்றி
ஓம் காதற் தேவனே போற்றி
ஓம் குறு வடிவனே போற்றி
ஓம் குமுதப் பிரியனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் கௌரி குண்டத்தருள்பவனே போற்றி
ஓம் கௌரி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் சந்திரனே போற்றி
ஓம் சஞ்சீவியே போற்றி
ஓம் சதுரப் பீடனே போற்றி
ஓம் சதுரக் கோலனே போற்றி
ஓம் சமீப கிரகனே போற்றி
ஓம் சமுத்திர நாயகனே போற்றி
ஓம் சாமப் பிரியனே போற்றி
ஓம் சாந்தராயணவிரதப் பிரியனே போற்றி
ஓம் சிவபக்தனே போற்றி
ஓம் சிவனருள் வாய்த்தவனே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சித்ராங்கதனுக்கருளியவனே போற்றி
ஓம் தண்ணிலவே போற்றி
ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் தமிழ்ப்பிரியனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தட்சன் மருகனே போற்றி
ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி
ஓம் தாரைப் பிரியனே போற்றி
ஓம் திருமகள் சோதரனே போற்றி
ஓம் திங்களூர்த் தேவனே போற்றி
ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திருஉருவனே போற்றி
ஓம் திருப்பதியில் பூசித்தவனே போற்றி
ஓம் திருமாணிக்கூடத்தருள்பவனே போற்றி
ஓம் தென்கீழ் திசையனே போற்றி
ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
ஓம் தூவெண்மையனே போற்றி
ஓம் தொழும் பிறையே போற்றி
ஓம் நரி வாகனனே போற்றி
ஓம் நக்ஷத்ர நாயகனே போற்றி
ஓம் நெல் தானியனே போற்றி
ஓம் நீர் அதிதேவதையனே போற்றி
ஓம் பயறு விரும்பியே போற்றி
ஓம் பழையாறையில் அருள்பவனே போற்றி
ஓம் பத்துபரித் தேரனே போற்றி
ஓம் பரிவாரத் தேவனே போற்றி
ஓம் பல்பெயரனே போற்றி
ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி
ஓம் பாண்டவர் தலைவனே போற்றி
ஓம் பார்வதி ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் புதன் தந்தையே போற்றி
ஓம் போற்றாரிலானே போற்றி
ஓம் பெண் கிரகமே போற்றி
ஓம் பெருமையனே போற்றி
ஓம் மதியே போற்றி
ஓம் மனமே போற்றி
ஓம் மன்மதன் குடையே போற்றி
ஓம் மகிழ்விப்பவனே போற்றி
ஓம் மாத்ரு காரகனே போற்றி
ஓம் மாலிதயத் தோன்றலே போற்றி
ஓம் முத்துப் பிரியனே போற்றி
ஓம் முருக்கு சமித்தனே போற்றி
ஓம் முத்து விமானனே போற்றி
ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி
ஓம் மூலிகை நாதனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் ரோகிணித் தலைவனே போற்றி
ஓம் ரோகமழிப்பவனே போற்றி
ஓம் வைசியனே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் விண்ணோர் திலகமே போற்றி
ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி
ஓம் விடவேகந் தணித்தவனே போற்றி
ஓம் வெண்குடையனே போற்றி
ஓம் வெள்அலரிப் பிரியனே போற்றி
ஓம் வெண் திங்களே போற்றி

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4