இனப்பெருக்கத் திட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற உலகின் கடைசி ஒற்றை கொம்பு வெள்ளை காண்டாமிருகம்

Prasu
3 years ago
இனப்பெருக்கத் திட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற உலகின் கடைசி ஒற்றை கொம்பு வெள்ளை காண்டாமிருகம்

உலகின் கடைசி வடக்கத்திய வெள்ளை ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகங்களில் ஒன்றுக்கு, இனப்பெருக்க திட்டத்திலிருந்து விஞ்ஞானிகள் ஓய்வு கொடுத்துள்ளனர். இந்த இனம் அழிந்துவிடாமல் இருக்க, இந்த இனப்பெருக்கத் திட்டம் நடத்தப்பட்டது.

காண்டாமிருகம் தொடர்பாக நடத்தப்பட்ட அபாய மதிப்பீட்டில், 32 வயதான நாஜின் என்கிற காண்டாமிருகத்தின் வயது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாஜினோ அல்லது அதன் மகளான ஃபடுவோ ஒரு கருவைச் சுமக்க முடியாதவையாக உள்ளன.

வெள்ளை காண்டாமிருக இனத்தின் கடைசி ஆண் விலங்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இறந்து போனது. ஆனால் அதன் விந்தணு சேகரிக்கப்பட்டு, இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பல ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட நுட்பத்தைப் பயன்படுத்தி, கால்நடை மருத்துவர்கள் காண்டாமிருகத்திலிருந்து கருமுட்டைகளை சேகரிக்கிறார்கள். சேகரித்த கருமுட்டைகளை இத்தாலியில் உள்ள ஒரு கருவுறுதல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஏற்கனவே இறந்த இரு ஆண் காண்டாமிருகத்திலிருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள விந்தணு மற்றும் பெண் காண்டாமிருகத்தின் கருமுட்டையைப் பயன்படுத்தி செயற்கை முறையில் கருதரிக்கச் செய்கிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!