பிரித்தானியாவை மிரட்டும் மெக்ரோனுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் ஆப்பு!

பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவுப்பகுதியில் பிரான்ஸ் மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்காவிட்டால், அந்த தீவுகளுக்கு மின்சாரத்தைத் துண்டித்துவிடுவோம் என பிரான்ஸ் மிரட்டியிருந்தது.
பிரித்தானியாவுக்கு சொந்தமான சேனல் தீவுகளில் ஒன்றான ஜெர்ஸி தீவுப்பகுதியில் மீன் பிடிக்க பிரான்சுக்கு சொந்தமான 47 மீன்பிடி படகுகள் அனுமதி கோரியிருந்தன. ஆனால், அந்த 47 படகுகளில் 12 படகுகளுக்கு மட்டுமே பிரித்தானியா உரிமம் வழங்கியது. இதனால் பிரான்ஸ் மீனவர்கள் கோபமடைந்தனர்.
ஜெர்ஸி தீவுக்கு பிரான்சிலிருந்துதான் மின்சாரம் செல்லுகிறது. ஆகவே, தங்கள் 47 படகுகளுக்கும் பிரித்தானியா உரிமம் வழங்கவில்லையென்றால், மின்சாரத்தை துண்டித்துவிடுவோம் என பிரான்ஸ் மிரட்டல் விடுத்தது.
பிரெக்சிட்டுக்குப் பின் இரு நாடுகளுக்கும் உரசல்கள் இருந்துகொண்டே இருந்த நிலையில், அவ்வப்போது இதுபோல் மிரட்டல் விடுப்பதை பிரான்ஸ் வழக்கமாக்கிக்கொண்டது.



