கனேடிய நகரமொன்றின் ஊழியர்களுக்கு பேரிடியாகும் தகவல்!

#world_news #Canada
கனேடிய நகரமொன்றின் ஊழியர்களுக்கு பேரிடியாகும் தகவல்!

ரொறன்ரோ நகர ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் தவிர்த்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோ நகர ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என நகர நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது அந்த காலக்கெடு முடிவடைய இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில்,

முழுமையாக தடுப்பூசி போட்டுகொள்ளாத ஊழியர்கள் ஊதியமின்றி பணி இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது எனவும், பணி நீக்கமும் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் புதன்கிழமை மறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ரொறன்ரோ நகர நிர்வாகம், நவம்பர் 1ம் திகதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 6 வார கால ஊதியமற்ற பணி இடைநீக்கம் முடிந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், மருத்துவ காரணங்களுக்காகவும் வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாதவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்றே கூறப்படுகிறது.

மேலும், தடுப்பூசியின் பலன்கள் குறித்து ஊழியர்களுக்கு எடுத்துரைக்கப்படும் எனவும் இணையத்தினூடாக அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும் என நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழலை ரொறன்ரோ நகர ஊழியர்கள் அக்டோபர் 15ம் திகதி சமர்ப்பிக்க வேண்டும், நவம்பர் 15ம் திகதி இரண்டாவது டோஸ் போட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை 95 சதவிகித ஊழியர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 26,138 ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!