47 வருடங்களுக்கு பிறகு கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Prasu
3 years ago
47 வருடங்களுக்கு பிறகு  கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கென்யாவில் மனைவிகள் இருவரை விட்டுச்சென்ற கணவர், 47 வருடங்கள் கழித்து வீடு திரும்பிய போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கென்யாவில் இருக்கும் Malava-என்ற பகுதியில் உள்ள Makale என்ற கிராமத்தில் வசித்த Peter Oyuka என்ற நபர், கடந்த 1974 ஆம் வருடத்தில் தன் இரண்டு மனைவிகளையும், ஐந்து பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக நல்ல மேய்ச்சல் நிலம் இருக்குமிடம் நோக்கி சென்றிருக்கிறார். ஆனால் பல வருடங்களான பின்பும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், 47 வருடங்கள் கழித்து, தற்போது வீடு திரும்பிய அவர், தன் மனைவிகளுக்காக காத்திருந்துள்ளார். ஆனால் அவரின் மனைவிகள் வேறு திருமணம் செய்து வாழத் தொடங்கிவிட்டனர். இதனை அறிந்தவுடன் அவர் அதிர்ந்து போயுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, நான் வீடு திரும்பும்போது என் மனைவிகள் இருவரும் வரவேற்பார்கள் என்று எண்ணினேன்.

அவர்கள் வேறு திருமணம் செய்தது வருத்தமாக இருக்கிறது. நான் தசன்யாவில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்தப் பெண், என் குழந்தையை பார்க்கவிடவில்லை. எனவே தான், அந்த பெண்ணை விட்டுப் பிரிந்து, என் வீட்டிற்கு திரும்ப முடிவெடுத்தேன்.

பரவாயில்லை, மனைவிகள் இருவரும் அவர்களது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கட்டும். நான் தற்போது உயிருடன் தான் இருக்கிறேன் என்பது மட்டும் அவர்களுக்கு தெரிந்தால் போதும். அது அவர்களுக்கு தெரிய வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!