லிபியாவில் புலம்பெயர்ந்தோர் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

#world_news
லிபியாவில் புலம்பெயர்ந்தோர் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

பெரிய குடியேற்ற ஒடுக்குமுறைக்கு மத்தியில் லிபியா 4000 பேரை சுற்றி வளைக்கிறது.

மேற்கு லிபியாவில் நடந்த ஒரு பெரிய அடக்கு முறையின் விளைவாக நுாற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 4000 புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவணமற்ற இடம்பெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பாதுகாப்பு பிரச்சாரம் என அதிகாரிகள் விவரித்து இந்த சோதனைகள் கர்க்ரேஷில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்த அடக்கு முறைக்கு தலைமை தாங்கிய உள்துறை அமைச்சகம் எந்தக் கடத்தல் அல்லது மோசடிக்காரர்களையும் கைது செய்ததாக தெரிவிக்கவில்லை.

500 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 4000ஐ எட்டியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளர். துஷ்பிரயோகம் மற்றும் மோசமான நடத்தையில் இவர்கள் உள்ளனர் என்று லிபியாவின் நோர்வே அகதிகள் ஆணையகத்தின் இயக்குனர் டாக்ஸ் ரோக் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!