பிரித்தானிய பிரச்சினை முடிவுக்கு வந்தது - நோர்வேயூடாக எரிவாயு மற்றும் மின்சாரம்
Nila
3 years ago

பிரித்தானியர்கள் மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் உள்ளனர். அங்கு எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலை உயர்வடைந்துள்ளது. ஆனால் இப்போது நோர்வே நீர் மின்சக்தி முதன்முறையாக பிரித்தானிய சக்தியுடன் கலக்கவுள்ளது.
நாளை 1 ம் திகதி வெள்ளிக்கிழமை, உலகின் மிக நீளமான கடலுக்கு கீழே செல்லும் கம்பியின் மின் வழங்கும் சோதனையின் செயல்பாடு ஆரம்பிக்கிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பிரித்தானிய குடும்பங்களுக்கு நோர்வேயின் நீர் மின்சாரத்தை வழங்க முடியும்.
இங்கிலாந்தில் காற்று நன்றாக இருக்கும் போது அங்குள்ள காற்றாலை மின்சாரம் நோர்வேக்கு திரும்பும், எனவும் தெரிவிக்கப்படுகிறது.



