சுவிற்சலாந்தில் ஒரு வான் தடை அழுத்தாமல் ஒரு மெசிடிஸ் காருடன் மோதியதில் 1 நபர் பலத்த காயமடைந்தார்.

புதன் கிழமை மாலை ஸ்பரைடன்பாக் ஏஜி அருகே ஏ1 இல் ஒரு விபத்து ஏற்பட்டது. இரவு 10.45 மணியளவில், விநியோக பாரவுர்தி சாரதி சூரிச் திசையில் மூன்று வழிச்சாலையின் நடுவில் ஓட்டிக்கொண்டிருந்தார். அவ்வாறு அவர் வரும் போது, 30 வயதான அவரால் முன்னால் போக்குவரத்து நின்றுவிட்டதை சரியாக கவனிக்க தவறிவிட்டார்.
கிட்டத்தட்ட தடை இல்லாமல் வேன் அதன் முன்னால் இருந்த மெசிடிஸின் பின்புறம் மோதியது. பாரதுாரமான மோதல் காரணமாக, இது இன்னும் முன்னால் உள்ள காருக்கு எதிராக தள்ளப்பட்டது என்று ஆரோ கன்டொன் பொலீஸ் ஒரு அறிக்கையில் எழுதுகிறார்.
வேன் சாரதி இருக்கைக்கான பாதுகாப்பு பட்டி அணியாததால் பலத்த காயமடைந்தார். அம்புலன்ஸ் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. கார் சாரதி இலேசான காயங்களுக்குட்பட்டார்.
பின்புறம் இரண்டு வாகனங்கள் ஒட்டுமொத்தமாக அடித்து நொறுக்கப்பட்டன. முன்பக்க காரும் சேதமடைந்தது.



