சுவிற்சலாந்தில் கொவிட் சோதனைக்காக 4 மிலியன் பிராங்குகள் ஒரு நாளைக்கு செலவு.

சுவிற்சலாந்தில் 28ம் திகதி செப்டம்பர் நடந்து முடிந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றுக்காரணமாக வைத்தியசாலையில் 584 பேரும் அதில் 189 தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டனர். அன்று 5 பேர் மரணமடைந்தனர்.
கொவிட் சோதனைக்காக வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு 4 மிலியன் பிராங்குகள் செலவாகும். கொரோனா வைரல் பற்றிய அறிவுரை திரையிடுவதற்கான செலவுக்கு யார் பணம் செலுத்த வேண்டும். சுவிற்சலாந்து சர்ச்சையை கிளப்புகிறது. இந்த வி்டயத்தில் மத்திய சபை மற்றும் பாராளுமன்றம் உடன்படவில்லை.
தடுப்பூசி போடாத குடியிருப்பாளருக்கு இனி சோதனைகள் இலவசமாக இருக்காது என்று சுகாதார அமைச்சர் அலைன் பெர்சட் அறிவித்தார். ஆனால் கொவிட் சான்றிதழ் தேவை இருக்கும் வரை அன்ரிஜன் சோதனைகளுக்கு அரசாங்கம் பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு ஜனவரி 24 2022 வரை என்று இடது மற்றும் வலதுசார கட்சிகள் வலியுறுத்துகினறன.
இந்த தேதி வரை சோதனைகள் இலவசமாக இருந்தால், அவை மத்திய அரசுக்கு சுமார் 770 மில்லியன் பிராங்குகள் செலவாகும்.
மாநில சபை நேற்று இந்த பிரச்சினையை பரிசீலித்தது.



