மறைத்து வைக்கப்பட்ட டொல்பின் இறைச்சியுடன் சந்தேக நபர் கைது
#Arrest
#Police
Prathees
3 years ago

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட 43 கிலோகிராம் டிடால்பின் இறைச்சி மற்றும் 13 கிலோகிராம் மான் இறைச்சியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
தங்காலையில் நலகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து குறித்த இறைச்சித் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தங்காலை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனையின் போது அதிரடிப்படையினர் இரண்டு துப்பாக்கிகளையும் கைப்பற்றி ள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கலமெட்டிய வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



