இலங்கை முழுமையாக திறக்கப்படுமா?
#SriLanka
#Lockdown
Yuga
3 years ago

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் தீர்மானத்தை எட்டும் போது, நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என சுகாதார பிரிவினர், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத், நேற்று (23) இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை ஒரே தருணத்தில் திறப்பதற்கான பரிந்துரையை தாம் முன்வைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
நாடு முழுமையாக திறக்கப்படுமானால், நிலைமை மேலும் மோசமடையும் என அவர் குறிப்பிடுகின்றார்.
எனவே, நாடு படிப்படியாக திறப்பதே மிகவும் பொருத்தமானது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்



