சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக முதலீடு செய்துள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார்!

ஜனாதிபதி கை பார்மலின், ஐரோப்பிய நிறுவனங்களுக்கிடையேயான உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும், ஐரோப்பிய நிறுவன உறவுகளுக்கான ஐரோப்பிய ஆணையத்தின் துணைத்தலைவர் மாரோஸ் செவ்கோவிக் இது சுவஸின் ஒருங்கிணைந்த நிதிப்பங்களிப்புகள் உரையாடலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக பரிந்துரைத்துள்ளார்.
இந்த வாரம் நியுயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கலந்து கொண்ட பார்மலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது, சுவிற்சலாந்து ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆல்ப்ஸ் வழியாக புதிய இரயில் இணைப்பை உருவாக்க 20பிலியன்க்கும் அதிகமாக முதலீடுகளை செய்யதுள்ளது என்றார். இது ஐரோப்பா முழுவதற்கும் பயனிக்கும் என்று அவர் கூறினார்.
"உயர் மட்டக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டவுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக நாங்கள் செய்த அனைத்தையும் மேஜையில் வைக்கலாம்" என்று பார்மலின் கூறினார்.



