மட்டக்குளிய கொலைச்சம்பவம்: பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரி

மட்டக்குளிய கிராம உத்தியோகத்தரின் கணவர் கொலை செய்யப்பட்டு களனி ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்குளிய இராணுவ புலனாய்வு பொறுப்பாளராக இருந்த கர்னலை ஒப்படைக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தற்போது இராணுவ காவல்துறையின் காவலில் உள்ள கர்னல் இன்று (20 ம் ததிகதி) அல்லது நாளை (21 ம் திகதி) பொலிஸில் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுவரை இந்த கொலை தொடர்பாக மட்டக்குளிய கிராம உத்தியோகத்தர் மற்றும் இராணுவ புலனாய்வு முகாமின் 13 வீரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மட்டக்குளிய இராணுவ புலனாய்வு முகாமின் அனைத்து அதிகாரிகளும் புதுக்குடியிருப்பு இராணுவ தலைமையகத்திற்கு மாற்றப்பட்டனர்.
மட்டக்குளிய சமிடடபுர கிராம உத்தியோகத்தர் இராணுவப்புலனாய்வ அதிகாரிடன் கொண்டிருந்த தகாத உறவு காரணமாக தனது கணவரை ஆகஸ்ட் 17ம் திகதி அன்று இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.
அவரது உடல் களனி ஆற்றில் வீசப்பட்டதுடன், மூன்று நாட்களுக்குப் பிறகு சடலம் மோதர பகுதியில் மீட்கப்பட்டது.
இச்சம்பவத்தை விசாரித்த கொழும்பு வடக்கு சிறப்பு குற்றப்பிரிவு, மட்டக்குளிய கிராம உத்தியோகத்தர் உட்பட இராணுவப் புலனாய்வு வீரர்கள் 13 பேரைக் கைது செய்தது.



