கண்டி மாவட்ட மக்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்த செய்தி
#Covid Vaccine
Prasu
3 years ago

ஸ்புட்னிக் முதலாவது மருந்தளவை செலுத்திக் கொண்டவர்களுக்கான இரண்டாவது மருந்தளவு இன்று (20) முதல் செலுத்தப்படவுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நேற்றைய தினம் (19) கிடைத்துள்ளன.
கண்டி மாவட்டத்திலுள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசி இன்று (20) முதல் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.



