தோஷங்கள் நீங்க தினமும் சொல்ல வேண்டிய வராக மூர்த்தி ஸ்லோகம்

#Hindu
Prasu
2 years ago
தோஷங்கள் நீங்க தினமும் சொல்ல வேண்டிய வராக மூர்த்தி ஸ்லோகம்

மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில் மூன்றாவதாக அமைந்த அவதாரம் வராக அவதாரம். கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் இந்த வராக மூர்த்தி மந்திரத்தை படிக்கலாம்.

ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

பொருள்:

  • சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே, வராக மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராக மூர்த்தியே நமஸ்காரம்.

கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் இந்த வராக மந்திரத்தை படிக்கலாம்.