தென் ஆப்பிரிக்காவில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆயிரமாக அதிகரிப்பு

#Covid 19 #Death
Prasu
3 years ago
தென் ஆப்பிரிக்காவில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85  ஆயிரமாக அதிகரிப்பு

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் மொத்தமாக 85ஆயிரத்து இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 17ஆவது நாடாக விளங்கும் தென்னாபிரிக்காவில் இதுவரை 28இலட்சத்து 60ஆயிரத்து 835பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 640பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 125பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து நான்காயிரத்து 511பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 546பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 26இலட்சத்து 71ஆயிரத்து 322பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!