பிரான்ஸில் உலங்கு வானுார்தி விபத்தில் 5 பேர் பலி!
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

பிரான்ஸில் உலங்கு வானுர்தி ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் பயணித்த ஐவர் சாவடைந்துள்ளனர்.
Isère மாவட்டத்தில் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த ஐவர் சாவடைந்தனர். இவ்விபத்து இடம்பெற்று சில மணிநேரத்தில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது. Thoiry (Yvelines) நகரின் மீது பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக விமானம், 7 மணி அளவில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த விமானியும், பயணி ஒருவரும் சாவடைந்துள்ளனர்.
விபத்தை அடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 20 தீயணைப்பு படையினர் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்குரிய காரணம் குறித்து அறிய முடியவில்லை.



