கிரிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தில் இணைந்தார்.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

கிரிஸ்டியானோ ரொனால்டோ 12 வருடங்களின் பின் இங்கிலாந்தின் கால்பந்து கழகமான மன்செஸ்டர் யுனைட்ட்க்கு மீண்டும் வந்துள்ளார். உலகப்புகழ் வாய்ந்த கால்பந்து வீரராகிய இவருக்கு 4 பிள்ளைகள் உண்டு. ஐரோப்பாவிலேயே சிறந்த கால்பந்து வீரராகிய இவர் போர்த்துக்கல் நாட்டைச்சார்ந்தவர்.
மீண்டும் இந்த கழகத்திற்கு திரும்பியது ரொனால்டோவிற்கு இதன் சூழல் மிகவும் பழக்கமானது போலிருந்தது. பழைய இவரது நண்பர்களையும் முகங்களையும் யுனைட்டட்டில் பார்த்தவேளை மிகவும் சந்தோஷமாக இருந்தார்.
இவரது மனைவி ஜோர்ஜினா ரொட்றிகஸ் உடன் ஏழு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். இவரது பழைய அல்டேலி எட்ஜ் வீட்டிற்கு சிறு துாரத்திலேயே இதுவும் உள்ளது.
இவர் எதிர்வரும் நாட்களில் கழக கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புக்கள் உண்டு



