பாடசாலையால் சிறார்கள் கொவிட் தனிமைப்படுத்தலுக்குட்பட வேண்டியதில்லை.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

பாடசாலையைச் சேர்ந்த சிறார்கள் சூரிச்சில் 1000 கூடுதலாக தனிமைப்படுத்தலில் இருக்க பாடசாலையால் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதே எண்ணிக்கை நியுசாட்டலிலும், ஆரோவில் 600 சிறார்களுமாக தனிமைப்படுத்தலில் வீட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
சில பாலர் வகுப்பு பிள்ளைகளுக்கு கொரோன வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இதனை மேற்கொண்டுள்ளனர்.
இதைப்பற்றி பேர்ஜர் கருத்து தெரிவி்க்கையில் தொற்று பிள்ளைகளிடத்திலிருப்பது பிரச்சனை கிடையாது. ஆனால் இவர்கள் பலவீனமானவர்களுடன் இருப்பதே ஆகும். இதைத்தடுப்பது பெற்றோர் கடமையாகும். பாடசாலைகளினுடையது அல்ல. என்று அவர் கூறினார்.
முகக்கவசங்களுக்கான தேவையுமில்லை. பாடசாலைகள் பிள்ளைகளை ஒவ்வோர் வாரமும் பரிசோதனை செய்து கொண்டால் போதுமானது.
மிக முக்கியமானது சிறார்களின் கல்வியும் அவர்களுடைய வழமையான வாழ்வுமேயாகும். இவ்வாறு அவர் மேலும் கூறினார்.



