இங்கிலாந்தில் இரட்டை தடுப்பூசி பெற்றவர்களையும் கொடூரமாக தாக்கும் வைரஸ் அறிமுகம்!

இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 4-ம் இடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் சுமார் 38,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. மேலும் 167 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளதாக பிரித்தானிய சுகாதார சேவை அறிவித்துள்ளது.
உருமாறிய “மூ” கொரோனா ஒரு பக்கம் பரவ ஆரம்பித்துள்ள நிலையில். 2 தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்ட நபர்களுக்கு கூட, தற்போது பிரித்தானியாவில் கொரோனா தொற்ற ஆரம்பித்துள்ள விடையம் பல மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
உண்மையில் தாம் எடுத்துக் கொண்ட தடுப்பூசிகள் வேலை செய்கிறதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.



