சுவிற்சலாந்து பிரிட்டனுடன் செய்துகொண்ட உடன்படிக்கை வெற்றி!

சுவிஸ்-பிரிட்டன் கைச்சாத்திட்ட புதிய உடன்டிக்கைப்படி சுவிற்சலாந்து மற்றும் பிரிட்டன் பிரஜைகள் தத்தமது நாடுகளுக்கு வேலை அல்லது பயணம் செய்கையில் சுகாதாரம், பென்சன் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தொடரந்தும் தொடர்புகள் பேணப்படுமென உடன்பட்டிருக்கின்றன.
சுவிஸ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அலெய்ன் பேர்செட் இலண்டனுடன் ஒரு உடன்படிக்கை கையொப்பமிட்டுள்ளார். இது இரு பாரளுமன்ற முத்திரைகளும் இவற்றின் விதிமுறைகளுக்கு குத்தப்பட்டபின் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இதன் மூலம் மக்கள் தமது சமூக பாதுகாப்பிற்கான கட்டணங்களை ஒரு நாட்டில எந்த இடத்திலும் கட்டலாம். சில 77500 பிரஜைகள் மட்டில் இருநாட்டிலும் வசித்து தொழில் புரிந்து வருகிறார்கள்.
முக்கியமாக இந்த உடன்பாடனது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதன் காரணமாக சுவிற்சலாந்தின் தொழிலாளிகளின் வேலைக்களுக்கான இடையுறுகள் குறைக்குமளவு குறைத்து வியாபாரத்தினை நடத்தும் ஒரு தாந்திரீகமாகும்.
பெர்சட் இந்த உடன்படிக்கை இரு நாடுகளினதும் பொருளாதாரத்தினை முன்னேற்ற ஒத்துழைக்கும் என டுவிட் செய்திருந்தார்.



