பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 975பேர் பாதிப்பு- 191பேர் உயிரிழப்பு
#Corona Virus
Keerthi
3 years ago

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 975பேர் பாதிக்கப்பட்டதோடு 191பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 70இலட்சத்து 94ஆயிரத்து 592பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 33ஆயிரத்து 674பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 64ஆயிரத்து 325பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 47பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 56இலட்சத்து 96ஆயிரத்து 593பேர் பூரண குணமடைந்துள்ளனர்.



