மிக்ரோஸ் வாடிக்கையாளர்கள் பிட்காயின் மோசடிக்காரர்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

சுப்பர் மார்க்கட் சங்கிலியான மிக்ரோஸ் இலச்சினை பதித்த போலி துண்டு பிரசுரங்கள் சுவிற்சலாந்து முழுக்க விநியோகிக்கப்பட்டு வருகிறது.
துண்டுப்பிரசுத்தின்படி மிக்குரோஸ் 100 பிட்காயின்களை அதாவது 4.7மிலியன் பிராங்குகளை அதனது வாடிக்கையாளருக்கு வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் 0.01 மற்றும் 5 பிட்காயின்களை கணக்கில் வைப்பு செய்து அதாவது 474ம் 237000 பிராங்குகள், அதன் இரட்டிப்பு மடங்கை பெற்றுக்கொள்ள கூறியிருக்கிறது.
இதனைப்பற்றி பொலிஸார் கருத்து தெரிவிக்கையில் இது போன்ற பிட்காயின்மோசடிகள் தெரிந்ததே ஆனால் பெரிய தொரு சில்லறை வியாபாரியை இலக்கு வைத்துள்ளமை இதுவே முதல்தடவை என்றுள்ளனர்



