சுவிற்சலாந்தின் இலக்கு நாளுக்கு 70 ஆயிரம் தடுப்பூசி செலுத்துதல் ஆகும்.
#world_news
#Corona Virus
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்தில் செப்டம்பர் 7ம்திகதி முடிவடைந்த 24 மணி நேரத்தில் வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் 288 பேர அனுமதியில் இருந்தனர். அன்று 4 மரணங்கள் சம்பவித்தன.
சுவிற்சலாந்தில் பெப்ரவரியிலிருந்து ஏப்ரல் 2021 வரையிலான காலப்பகுதியில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிரகரித்த வண்ணம் இருந்தது, காரணம் டெல்டா வைரஸின் தீவிரம் ஆகும்.
முதலாவது கன்டோன் தடுப்பூசி செலுத்தும் பணி டிசம்பர் 2020 கடைசியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அன்று தொடக்கம் அரசாங்கம் சனத்தொகையில் 70வீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டுள்ளது.
சுவிற்சலாந்தில் தடுப்பூசி ஏற்றுதல் அவரவர் இஷ்டம் என்றாலும் திட்டமானது நாளுக்கு 70000 தடுப்பூசி செலுத்துதல் ஆகும். பெடரல் பொது சுகாதார அலுவலகம் 12-15வயதினரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள பரிந்துரைசெய்துள்ளது.



