பிரித்தானியாவில் கொவிட் காலத்தில் இரயில் மற்றும் மேடைக்கிடையில் சிக்கி ஒருவர் மரணம்.

லண்டனில் இரயில் நிலைய மேடை மற்றும் இரயிலுக்கு இடையில் விழுந்து ஒருவர் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கிழக்கு லண்டனைச் சேர்ந்த 59 வயது மதிக்கத்தக்க Jama Mohamed Warsame என்ற நபர் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் திகதி Lambeth-ல் தங்கிவிட்டு, வீடு திரும்புவதற்காக புறப்பட்டுள்ளார்.அப்போது தான் இங்கிலாந்தில் கொரோனாவிற்கான முதல் ஊரடங்கு போடப்பட்டிருந்தது
அப்போது ஊரடங்கு என்பதால், அங்கு இரயில்வே ஊழியர்களோ, மக்களோ அதிகம் இல்லை. அவர் இறங்க முற்பட்ட போது கை அசைவின் மூலம் தெரிவிக்க முயன்றார், ஆனால் இரயில் புறப்பட, அவர் இறங்க முற்பட, இரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் விழுந்துவிட்டார்.
இதனால் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு உதவவோ, அல்லது ஒரு அபாய அலாரத்தை எழுப்பவோ யாரும் அங்கு வரவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .



