பிரித்தானியா பவுண்டினை வைத்து மோசடியா?

பிரித்தானிய ஒரு பவுண்டின் இலங்கை பெறுமதி 323 ரூபாவை தொட்டுள்ளது என்பது, பல தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடயம். ஆனால் இந்த விலையை இலங்கை அரசு தான் ஏற்படுத்தி உள்ளது பெரும்பாலானோர் அறியாத விடயம்.
உண்மையில் இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம் 277 ரூபா தான். அப்படி என்றால், 46 ரூபாவை எப்படி எக்ஸ்ரா(Extra) வாக தருகிறார் இந்த உண்டியல் காரர்கள் ? இது எப்படி சாத்தியம் என்று யாராவது நினைத்தீர்களா ? இங்கே தான் சிங்கள புத்தி ஜீவிகள் ஊடுருவியுள்ளார்கள். இவர்கள் பல வெளி நாடுகளில் செயல்பட்டு, இலங்கை ரூபாயின் விலையை கூட்டியுள்ளார்கள்.
இதனால் பல தமிழர்கள் நல்ல ரேட் போகிறது என்று, வழமையாக அனுப்பும் காசை விட பன் மடங்கு கூடிய காசை இலங்கைக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் இந்த பவுண்டுகளை, மற்றும் அமெரிக்க, கனேடிய டாலர்கள், சிங்கள அதிகாரிகள் அப்படியே வாங்கி இலங்கை தூதுவராலயத்திடம் கொடுக்கிறார்கள்.
இதனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இலங்கை தூதுவராலயத்தில், பல லட்சம் வெளிநாட்டு காசுகள் சேகரிக்கப்பட்டு. அவர்கள் வங்கி(Bank) ஊடாக இலங்கைக்கு அனுப்பப் படுகிறது. இலங்கை அரசின் வெளிநாட்டு தூதுவராலய வங்கிக் கணக்கை, பொலிசார் அல்லது அன் நாட்டு அதிகாரிகள் சோதனை செய்ய முடியாது.
தூதுவராலயத்தில் வேலை பார்க்கும் நபர்களுக்கு எப்படி இமியூனிட்டி என்று சொல்லப்படும் ராஜாங்க பாதுகாப்பு உள்ளதோ. அது போல அந்த வங்கிக் கணக்கிற்கும் இமியூனிட்டி உள்ளது. இதனால் அதனை கவனிக்க எந்த ஒரு நாட்டிற்கும் உரிமை இல்லை. இதனால் இந்த வங்கி இமியூனிட்டியை பாவித்து தாம் சேர்த்த பணத்தை அவர்கள் இலங்கைக்கு அனுப்பும் போது. அது அன்னியச் செலாவணியாக இலங்கை மத்திய வங்கிக்கு போய் சேரும்.
ஆனாலும் கடந்த சில நாட்களாக 300 க்கும் 322 க்கும் இடையில் இருந்த பெறுமதி திடீரென 288 க்கு குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கத



