தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளையே சுவிஸ் விமானசேவை ஏற்றிக்கொள்ள வலியுறுத்துகிறது

ஆகஸ்ட் 24ம்திகதி 2012ல் சுவிஸ் விமானச்சேவை தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதை உறுதிசெய்திருந்தது. இதே கொள்கை பயணிகளுக்கும் இனிமேல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என விரான்க்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விமானச்சேவையே ஐரோப்பாவின் முதல்விமானச்சேவை ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றிக்கொண்டது. பயணிகளுக்கு தடுப்பூசி ஏற்றுவது சம்பந்தப்பட்ட விடயம் அவரது பயண துாரம் மற்றும் தொடர்புகளை பொறுத்துள்ளது. ஆனால் அவர்கள் விமானச்சேவை மூலம் நேரடியாக கேட்டுக்கொள்ளாவிட்டாலும், அதன் சட்டங்கள் அதனை பின்பற்ற வழிவகுக்கும் என விரான்க்ஸ் கூறினார்.
இன்னும் சில காலங்களில் எப்படி மஞ்சள் காமாலைக்கு சகல நாடுகளும் தடுப்பூசி ஏற்றப்படுவதை உறுதிசெய்தார்களோ அதே போன்று கொவிட்-19 க்கும் இனிமேல் செய்வார்கள். பிரேசில் மற்றும் கானா போன்ற நாடுகள் தடுப்பூசி பயணிகள் வரும் போது அவர்கள் ஏற்றியுள்ளார்களா என்பதை சோதித்துக் கொள்கின்றன.



